தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கள்ளக்காதல் விவகாரம்: பெண் உள்பட 2 பேர் தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி குண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஆண்டி மனைவி அம்பிகா (35). இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதே ஊரைச் சேர்ந்த பெரியாண்டி மகன் சக்திவேல் (22) என்பவருடன் அம்பிகாவுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது

Updated On :12 மே 2013, 3:07 pm IST

அரூர் அருகே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி குண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஆண்டி மனைவி அம்பிகா (35). இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதே ஊரைச் சேர்ந்த பெரியாண்டி மகன் சக்திவேல் (22) என்பவருடன் அம்பிகாவுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரம் ஊரில் தெரிந்த காரணத்தால் அம்பிகா அவ்வூரில் உள்ள விவசாயி கோபால் என்பவரது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாராம். அம்பிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அறிந்த இளைஞர் சக்திவேல், அவ்வூரைச் சேர்ந்த விவசாயி முனுசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இவ்விரு சம்பவங்கள் குறித்தும் கிராம மக்களுக்கு இன்று காலை 7 மணியளவில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் குறித்து சித்தேரி கிராம நிர்வாக அலுவலர் அ.இளங்கோ அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சடலங்களை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இளைஞர் சக்திவேல், அம்பிகா ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா, அல்லது மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்து சடலங்களை கிணற்றில் வீசியும், தூக்கிட்ட நிலையில் மாமரத்தில் கட்டி வைத்துள்ளனரா என்பது குறித்து அரூர் காவல் ஆய்வாளர் என். சென்னகேசவன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.