உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

காதல் திருமணம் செய்த நர்சிங் மாணவி தற்கொலை

வியாசர்பாடி சர்மாநகரை சேர்ந்த சபரீஷ் கடந்த ஆண்டு இவரது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தூத்துக்குடியை சேர்ந்த நர்சிங் மாணவி

Updated On :12 மே 2013, 4:18 pm IST

வியாசர்பாடி சர்மாநகரை சேர்ந்த சபரீஷ் கடந்த ஆண்டு இவரது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தூத்துக்குடியை சேர்ந்த நர்சிங் மாணவி சரண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இது காதலாக மாறியது. சபரீஷ்- சரண்யா இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து தனிக்குடித்தனம் இருந்தனர். இதுபற்றி சரண்யாவின் பெற்றோருக்கு 6 மாதத்திற்கு பின்பே தெரியவந்துள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த சபரீஷ் மனைவியை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த சரண்யா மண்எண்ணையை குடித்தார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சரண்யா உயிரிழந்தார். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.