எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

குடும்பத் தகராறில் கணவர் தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே சத்தியரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவரது மனைவி கனகவள்ளி(27). இரவது கணவர் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால்  இவர்களுக்குள்

Updated On :12 மே 2013, 5:55 pm IST

விருதுநகர் அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றததால் கணவர் தூக்கிட்டு சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே சத்தியரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவரது மனைவி கனகவள்ளி(27). இரவது கணவர் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால்  இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தகராறை தொடர்ந்து கோபித்துக் கொண்டு, அதே கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு கனகவள்ளி கோபமாக சென்றார். பின்னர், அடிக்கடி மனைவியை வாழ வரும் படி அழைத்தற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அமைதியை இழந்த மணிகண்டன் வீட்டில் அனைவரும் தூங்கிய பின் தூக்கிட்டு உயிரிழந்தார். இது குறித்து உறவினர்கள் பார்த்து பாண்டியன் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.