பாஸ்போர்ட் பெற பொய்யான ஆவணங்க்ள் கொடுத்ததாக இளைஞர் ஒருவரை போலீஸார், இன்று கைது செய்தனர். தலைமறைவான ஒரு பெண் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாயல்குடி காவல் நிலைய சரகம், ஒப்பிலானைச் சேர்ந்தவர் முகம்மது கான் மகன் தமீன் அன்சாரி(23). இவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக போலியான பள்ளி படிப்பு சான்றிதழ் கொடுத்திருந்தாராம். இதே போன்று அதே ஊரைச் சேர்ந்த முகம்மது கமீது மகள் ஹன்சியஸ் நஸ்லின் என்பவர் பாஸ்போர்ட் பெற, போலியான பிறப்பு சான்றிதழ் கொடுத்திருந்தாராம்.போலி ஆவணங்கள் தரப்பட்டிருந்ததை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வர ராஜா கண்டு பிடித்து சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாவட்ட காவல் கண்காணிபாளர் மயில் வாகனன் உத்தரவில் காவல் ஆய்வாளர் லாமேக், தார்பு ஆய்வாளர்கள் இருளப்பன், சண்முகவேல் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, தமீன் அன்சாரியை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தமீன் அன்சாரியை 15 நாள காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் சி.மோகன் ராம் உத்தரவிட்டார். தலைமறைவான ஹன்சியஸ் நஸ்லினை சாயல்குடி போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை: அரசாணை வெளியீடு
வரலாற்று மாற்றம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
