ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வலது பக்கத்தில் இதயம் கொண்ட விவசாயிக்கு அரிதான அறுவைச் சிகிச்சை

இதயம், இரப்பை, கணையம், கல்லீரல் உள்ளிட்ட அனைத்து உள் உறுப்புகளும் இடம் மாறி இருந்த ஏழை விவசாயிக்கு, குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மிகுந்த சிரமத்துடன் அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனர்

Updated On :12 மே 2013, 7:45 am IST

இதயம், இரப்பை, கணையம், கல்லீரல் உள்ளிட்ட அனைத்து உள் உறுப்புகளும் இடம் மாறி இருந்த ஏழை விவசாயிக்கு, குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மிகுந்த சிரமத்துடன் அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் மார்த்தாண்டம்பட்டியைச் சேர்ந்த ஏழை விவசாயி சண்முகம் (58). இவர் படபடப்பு, மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். உதவிக்கு யாரும் இல்லாதநிலையில் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வசிக்கும் தனது மகள் வீட்டில் தங்கி இருந்து மருத்துவச் சிகிச்சை பெற சென்னைக்கு வந்தார். குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த சண்முகத்தை பரிசோதித்த இதய சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.பாலச்சந்திரன், அவருக்கு இதய வால்வு சுருங்கி இருப்பதைக் கண்டறிந்தார்.

வலப்புறத்தில் இதயம்: மேலும் இடப்புறம் இருக்க வேண்டிய இதயம் வலப்புறத்திலும், இரப்பை, கணையம் இடதுபுறத்திலும் மாறி அமைந்து இருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது. சண்முகத்தின் உள் உறுப்புகள் அனைத்தும் இடம் மாறி இருந்த நிலையில் டாக்டர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வழக்கமாக மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை முறையைப் பின்பற்றாமல், புதிய முறை மூலம் இதய அறுவை சிகிச்சை செய்து சண்முகத்திற்கு மறுவாழ்வு அளித்தனர்.

டாக்டர் எஸ்.பாலச்சந்திரன் இதுகுறித்து கூறியதாவது: உலகெங்கும் சண்முகத்தைப் போன்று சராசரியாக 12 ஆயிரம் பேரில் ஒருவருக்கு உள் உறுப்புகள் இடம் மாறி அமைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற மாறுபட்ட உடலமைப்பைப் பெற்றவர்களுக்கு வெளிநாடுகளில் தனி மருத்துவ அடையாள அட்டை வழங்குவதைப் போன்று இங்கும் வழங்கப்படுவது அவசியம். அதன் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் உள் உறுப்புகளின் நிலையை அறிந்து சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்றார்.

இதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ரங்கராஜன், செங்குட்டுவன், மயக்கவியல் மருத்துவர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.