அட்சய திருதியை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பக்தர்களுக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.
அட்சய திருதியை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் கோயிலில் திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. மே 12, 13 தேதிகள் அட்சய திரிதியை என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரண்டு தினங்களும் கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்படத்திற்கு எதிரே உள்ள நடனப் பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று அன்னதானத்தை பெற்று சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிர்ஸ்ட் நிறுவனர் உ. வெங்கடேச தீக்ஷிதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







