பாஸ்போர்ட் பெற பொய்யான ஆவணங்க்ள் கொடுத்ததாக இளைஞர் ஒருவரை போலீஸார், இன்று கைது செய்தனர். தலைமறைவான ஒரு பெண் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாயல்குடி காவல் நிலைய சரகம், ஒப்பிலானைச் சேர்ந்தவர் முகம்மது கான் மகன் தமீன் அன்சாரி(23). இவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக போலியான பள்ளி படிப்பு சான்றிதழ் கொடுத்திருந்தாராம். இதே போன்று அதே ஊரைச் சேர்ந்த முகம்மது கமீது மகள் ஹன்சியஸ் நஸ்லின் என்பவர் பாஸ்போர்ட் பெற, போலியான பிறப்பு சான்றிதழ் கொடுத்திருந்தாராம்.போலி ஆவணங்கள் தரப்பட்டிருந்ததை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வர ராஜா கண்டு பிடித்து சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாவட்ட காவல் கண்காணிபாளர் மயில் வாகனன் உத்தரவில் காவல் ஆய்வாளர் லாமேக், தார்பு ஆய்வாளர்கள் இருளப்பன், சண்முகவேல் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, தமீன் அன்சாரியை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தமீன் அன்சாரியை 15 நாள காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் சி.மோகன் ராம் உத்தரவிட்டார். தலைமறைவான ஹன்சியஸ் நஸ்லினை சாயல்குடி போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


