லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

போலீஸார் போல் நடித்து மூதாட்டியிடம் 12 பவுன் கொள்ளை

போலீஸ்காரர் போலும், உதவுவது போலும்  நடித்து, மூதாட்டியிடம் 12 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

Updated On :13 மே 2013, 7:11 am

போலீஸ்காரர் போலும், உதவுவது போலும்  நடித்து, மூதாட்டியிடம் 12 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வாடியான்பேட்டை அருகே உள்தெருவில் வசித்து வருபவர் புவனேஸ்வரி. 68 வயதாகும் ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், இன்று காலை இட்லி மாவு வாங்குவதற்காக வெளியில் சென்றார்.

அப்போது, 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து, அருகே இரண்டு பேர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும், மக்கள் பரபரப்பாக இருப்பதாலும், போலீஸாராகிய தாங்கள் அங்கே சோதனை நடத்திவிட்டு, குற்றவாளிகளை தேடிக் கொண்டு செல்வதாகவும், எனவே நகையைக் கழற்றி, ஒரு பேப்பரில் சுற்றி பையில் போட்டுக் கொள்ளவும் என்றும் கூறியுள்ளனர். மேலும், அவ்வாறு அந்த மூதாட்டி செய்தவுடன், நகையைப் பெற்றுக் கொண்ட அவர்கள், போலீஸ் ஸ்டேஷனில் வந்து நகையை வாங்கிக் கொள், நாங்கள் முன்னே செல்கிறோம் என்றும் கூறி, அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டனராம்.

நேரம் ஆனவுடன் தான் ஏமாற்றப்பட்டதையும் தன்னிடம் இருந்து நகையைப் பறிக்கவே இவர்கள் திட்டம் இட்டதையும் கண்டு புவனேஸ்வரி போலீஸில் புகார் அளித்தார். இதனை விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.