தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பைக் விபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் பலியானார். ஒருவர் காயம் அடைந்தார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜோசப் மெஸ்வின் (59). இவரும் சாத்தான்குளம் அருகில் உள்ள சோலையர்புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் டேவிட் தேவராஜ் (54) என்பவரும் திருச்செந்தூர் சென்றுவிட்டு சாத்தான்குளம் திரும்பி வந்தனர். அப்போது பன்னம்பாறை என்ற இடத்தில் தரைப் பாலத்தின் அருகில் கட்டுப்பாட்டை இழந்த பைக், மரத்தில் மோதி சாலையில் உருண்டது. இதில், ஜோசப் மெஸ்வின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் கையில் காயம் ஏற்பட்ட டேவிட் தேவராஜ் முதலுதவிக்குப் பின்னர் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வள்ளிமதுரை அணையிலிருந்து அரூருக்கு குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: ஈசன் முருகசாமி

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

