புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலையில் கிடந்த அண்ணாமலைப் பல்கலை விடைத்தாள்கள் பார்சல்: போலீஸாரிடம் ஒப்படைப்பு

கடலூர் விருத்தாசலம் அருகே எறும்பூரில் வெள்ளிக்கிழமை சாலையில் கிடைந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் கொண்ட இரு பார்சல்களை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மே 2013, 3:25 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் விருத்தாசலம் அருகே எறும்பூரில் வெள்ளிக்கிழமை சாலையில் கிடைந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் கொண்ட இரு பார்சல்களை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் எறும்பூர் கிராமத்தில் அண்ணாமலைப்  பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் கொண்ட சீலிட்ட இரு பார்சல்கள் வெவ்வேறு இடங்களில் சாலையில் வெள்ளிக்கிழமை கிடந்துள்ளது. அவ்வழியே சென்ற பொதுமக்கள் இருவர் பார்சல்களை எடுத்து ஒருவர் விருத்தாசலம் காவல் நிலையத்திலும், மற்றொருவர் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்திலும் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து இரு பகுதியைச் சேர்ந்த போலீஸார் பார்சல்களை பத்திரமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள் பார்சல்கள் என்றும், லாரியில் கொண்டு வந்த போது கீழே விழுந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.