முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாநிலத் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதே நாளில் முன்னாள் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளும் வருகிறது. ஆனால், இதுவரை அவரைக் கண்டுகொள்ளாத காங்கிரஸார் இந்த ஆண்டு இந்திரா படத்துக்கு அருகே பட்டேலின் படத்தையும் வைத்து மரியாதை செலுத்தினர்.
கடந்த 29-ஆம் தேதி ஆமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராகி இருக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேச, அந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், பட்டேல் காங்கிரஸ்காரர், மதச்சார்பற்றவர் என்று பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்களிப்புடன் ஒரே நாளில் இரண்டு உலக சாதனை ஓவியங்கள்

அந்தியூா் திமுக வேட்பாளருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

தவெக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

