தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரம் அருகே புயல் பாதுகாப்பு மையங்களை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On :1 நவம்பர் 2013, 11:50 am

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு அதிக மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வல்லம்படுகை, திருநாரையூர், நந்திமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புயல் பாதுகாப்பு மையங்களில் மின்வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளதா என ஆட்சியர் ஆய்வின் போது பார்வையிட்டு கேட்டறிந்தார். ஆட்சியருடம் சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் எம்.விஜயா ஆகியோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.