சிதம்பரம் அருகே உள்ள வடக்கு பிச்சாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25). கட்டட மேஸ்திரியாக உள்ளார். இவரிடம் வடக்குப்பிச்சாவரத்தைச் சேர்ந்த கரிகாலன் (41), காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள புடையூரைச் சேர்ந்த இளவரசன் (28), நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் மேலையூரைச் சேர்ந்த சிவக்குமார் (34), சிதம்பரம் அருகே உள்ள வீரன்கோயில்திட்டைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) ஆகிய நால்வரும் சேர்ந்து தங்களிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் கலசத்தில் உள்ள இரிடியம் கலந்த பஞ்சலோக பாத்திரம் உள்ளது என ஒரு பெட்டியை அளித்து ரூ.50 ஆயிரம் ரொக்கம் கேட்டுள்ளனர்.