சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள சிவசிவ நகரில் வசிப்பவர் சிக்கந்தர்பாண்டே. சிதம்பரம் ரயில்நிலைய ஸ்டேஷன் மாஸ்டராக உள்ள இவரது மனைவி பெயர் ஸ்வேதா (25). வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சிக்கந்தர்பாண்டே அருகாமையில் உள்ள மார்க்கெட்டிற்கு பொருள்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்று அழைப்புமணியை அழுத்தியுள்ளார். வீட்டின் கதவை அவரது மனைவி ஸ்வேதா திறந்த போது கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிக்க முயன்றுள்ளார். அப்போது ஸ்வேதி மர்மநபருடன் போராடி வெளியே தள்ளிவிட்டு பால்கனிக்கு சென்று கதவை தாழிட்டு கூச்சலிட்டதால் மர்மநபர் தப்பிஓடியுள்ளார். இதில் ஸ்வேதாவிற்கு கையில் கத்திகாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.