எனவே வருகிற நவ.29-ம் தேதி வெள்ளிக்கிழமை சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டமும், டிச.3-ம் தேதி செவ்வாய்க்கிழமை சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பும், டிச.4-ம் தேதி புதன்கிழமை உதவிஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டமும், டிச.5-ம் தேதி வியாழக்கிழமை இந்து ஆலய பாதுகாப்புக்குழு, மனித உரிமை மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்துடன் இணைந்து காவல்துறை லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பளரை சந்தித்து பணி நடைபெறாமல் உள்ளதற்கான காரகணத்தை தெரிவித்தும், முக்கிய தகவல்களை அளிப்பதும் என முடிவு செய்துள்ளோம் என கடிதத்தில் மு.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.