6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அழகர்கோவில் மலையில் துப்பாக்கியுடன் இருவர் கைது

அழகர்கோவில் மலையில் மான்கள்,காட்டுஎருமை, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. இதை வேட்டையாடும் நோக்கத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற இருவரை போலீஸார்

News image
Updated On :20 நவம்பர் 2013, 10:15 am

தர்மராஜ்

அழகர்கோவில் மலைப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றிய இருவரை மேலவளவு போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்தனர்.

அழகர்கோவில் மலையில் மான்கள்,காட்டுஎருமை, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. இதை வேட்டையாடும் நோக்கத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற இருவரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில்பட்டூர் ஆலம்பட்டியை சேர்ந்த பூமி 9(30), பச்சை (50) என தெரியவந்துள்ளது.

போலீஸார் இருவரிடமும் இருந்த 2 துப்பாக்கிகளையும் ரவை வெடிமருந்தையும் கைப்பற்றி கைது செய்தனர். இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க மேஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.