வரதட்சனைக் கொடுமையில் மனைவி தற்கொலை:கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
வரதட்சணைக் கொடுமை செய்து மனைவியை தற்கொலை செய்யத் தூண்டிய கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


வரதட்சணைக் கொடுமை செய்து மனைவியை தற்கொலை செய்யத் தூண்டிய கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிதம்பரம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த பக்கிரிசாமி, மனோன்மணி இவர்களின் மகள் மஞ்சுளா. இவருக்கும் சென்னை தாண்டவன் நகரைச் சேர்ந்த பெருமாள், மகேஸ்வரியின் மகன் உதயகுமாருக்கும் 2009- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு 12 சவரன் நகையும், ரூ. 30 ஆயிரம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுப்பதற்கு மஞ்சுளாவின் பெற்றோர் சம்மதித்துள்னர். ஆனால், திருமணத்தின் போது 7 சவரன் நகை மட்டும் கொடுத்துள்ளனர்.
மீதம் உள்ள 5 சவரன் நகையைக் கேட்டு உதயகுமார் மஞ்சுளாவை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்தது வந்தது. இதில், கொடுமை தாங்காத மஞ்சுளா மனம் உடைந்து 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உதயகுமார் மற்றும் அவரின் பெற்றோர் மீது வரதட்சணை கொடுமை உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை மகளிர் நீதிமன்ற நீதிபதி மீனாசதீஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் கெüரிஅசோகன் ஆஜரானார். வழக்கின் இறுதியில் உதயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மகேஸ்வரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் சேர்த்து ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...