அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 70 சவரன் நகை, பணம் திருட்டு

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 70 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On :13 அக்டோபர் 2013, 6:32 pm

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 70 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

 விருதுநகர் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் சேகர்(55). இவர் இப்பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு சொந்த வேலையின் காரணமாக அருகில் உள்ள தந்தை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றாராம். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிற்கு வந்து பார்க்கையில் முன்புறம் திறந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து தேகரும், அவரது மனைவியும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உள்ள சென்று பார்த்துள்ளனர்.  பீரோவை கடப்பாறையால் நெம்பி உள்ளேயிருந்த 70 சவரன் நகை, 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் கணிப்பொறி அகியவைகளை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக தேகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.