ஆம்பூர் அருகே பிடிப்பட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

ஆம்பூர் அருகே பைரப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்.  அங்கு அவருக்கு விவசாய நிலம் உள்ளது.  அதில் அவர் வேர்க்கடலை பயிரிட்டுள்ளார்.  ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய நிலத்திற்கு
ஆம்பூர் அருகே பிடிப்பட்ட 12 அடி நீள மலைப்பாம்பு
Updated on
1 min read

ஆம்பூர் அருகே சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பட்டது.

ஆம்பூர் அருகே பைரப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்.  அங்கு அவருக்கு விவசாய நிலம் உள்ளது.  அதில் அவர் வேர்க்கடலை பயிரிட்டுள்ளார்.  ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய நிலத்திற்கு சென்றார்.  பரமசிவம்.  அப்போது மலைப்பாம்பு ஒன்று அங்கிருந்துள்ளது.  உடனடியாக அப்பகுதி மக்களை அழைத்துச் சென்று அதனை பிடித்து சாக்கு பையில் போட்டு கட்டி வைத்தனர்.  ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில் வனத்துறையினர் அதனை கொண்டு சென்று காட்டில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com