சிதம்பரம் அருகே மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
குறிஞ்சிப்பாடி வட்டம் பூதம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் கருணாகரன் (28). சொந்த ஊரில் எதிர்வீட்டில் உள்ளவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டதால் தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சிதம்பரம் அருகே உள்ள என்.பூலாமேடு கிராமத்தில் உள்ள அக்கா வீட்டில் தங்கி கம்பி பிட்டர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் பூதம்பாடி கிராமத்திற்கு சென்று பூலாமேட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் பூலாமேடு கிராமத்தில் மாந்தோப்பில் உள்ள மாமரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் மர்மமான முறையில் அன்பழகன் வியாழக்கிழமை இறந்து கிடந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

