ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

குரூப் 1 பிரதான தேர்வு: 84 சதவீதம் பேர் பங்கேற்பு

துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. இப்போது காலியாகவுள்ள 25 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பிரதானத் தேர்வுக்கு

News image
Updated On :25 அக்டோபர் 2013, 2:35 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குரூப் 1 பிரதானத் தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணைய தலைவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.

துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. இப்போது காலியாகவுள்ள 25 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பிரதானத் தேர்வுக்கு ஆயிரத்து 372 பேர் தேர்வு பெற்றிருந்தனர். சென்னையில் பிரதானத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. 14 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.இந்தத் தேர்வினை 115 பேர் எழுதவில்லை. மொத்தம் 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் தெரிவித்தார்.

தேர்வு எப்படி இருந்தது குரூப் 1 பிரதானத் தேர்வு மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. முதல் நாளில் நடைபெற்ற தேர்வு 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டது. அதில் 3 மதிப்பெண் கேள்விகள் 30-ம், 8 மதிப்பெண் கேள்விகள் 15-ம், 15 மதிப்பெண் கேள்விகள் ஆறும் கேட்கப்பட்டிருந்தன.கேள்விகள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைப் போன்று இருந்ததாக தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.