ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சீர்காழி அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்.

வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள ஆத்துகுடியை சேர்ந்தவர் க.ராஜ்மோகன்(39),தர்மதானபுரம் கிராம நிர்வாக அலுவலர். இவர் ஞாயிற்றுகிழமை மேல ஆத்துகுடி ஊராட்சி

News image
Updated On :27 அக்டோபர் 2013, 2:17 pm

ஞானவேல்

சீர்காழி அருகே தர்மதானபுரம் கிராம நிர்வாக அலுவலர் மீது ஞாயிற்றுகிழமை தாக்குதல் நடந்தது.

வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள ஆத்துகுடியை சேர்ந்தவர் க.ராஜ்மோகன்(39),தர்மதானபுரம் கிராம நிர்வாக அலுவலர். இவர் ஞாயிற்றுகிழமை மேல ஆத்துகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் பணியில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த மேல ஆத்துகுடி அ.கவியரசன்(42)கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு அவரது சட்டையை கிழித்துள்ளார்.இது குறித்து வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் ராஜ்மோகன் அளித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோயில் காவல் உதவி ஆய்வாளர் எஸ்.கலைமணி மற்றும் காவலர்கள் கவியரசனை கைது செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.