வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

60 வயதை கடந்த விவசாயிகலுக்கு மாதம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டுத் தொகையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும், விவசாய துறைக்கு தனிபட்ஜெட் அறிவிக்க வேண்டும்

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 1:26 pm

G.Sundararaj

சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

60 வயதை கடந்த விவசாயிகலுக்கு மாதம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டுத் தொகையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும், விவசாய துறைக்கு தனிபட்ஜெட் அறிவிக்க வேண்டும், கான்சாகிப் வாய்க்காலில் நகரின் கழிவுநீர் கலப்பதை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.வேல்முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம்.அன்பழகன், ஏ.இளையபெருமாள், பி.இளையபெருமாள், டி.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி மாவட்ட துணைத் தவைவர் டி.மணிவாசகம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எம்.சேகர், மாவட்டத் தலைவர் எஸ்.ரங்கசாமி, கவுரவத் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.