கட்டட தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அருகே கட்டடத்தொழிலாளியை தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அருகே கட்டடத்தொழிலாளியை தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சின்னமேலுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி தர்மதுரை(25). இவர் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக அண்மையில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார்.
இந்த நிலையில், பேனர் அகற்ற கோரி, ஊரில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து பேனரை தர்மத்துரை அகற்றியுள்ளார்.
மேலும் பேனரை அகற்ற, அதே ஊரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அழகேசன்(31), ரவி (எ) குமரகுருபரன், சிவா மற்றும் ஞானசெல்வம் ஆகியோர் தான் காரணம் என கூறி, அவர்களிடம் தர்மதுரை தகாறில் ஈடுபட்டராம்.
இதில் அவர்கள் 4 பேரும் தர்மதுரையை தாக்கினராம். இது குறித்து தர்மதுரை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீஸார் அழகேசன், ரவி ஆகிய 2 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...