தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

அண்ணாமலைப் பல்கலை. பொறியியல்புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்ககூடாது, தமிழர்களை இழிவு படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாணவர் பாசறை சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர்.

News image
Updated On :6 செப்டம்பர் 2013, 7:58 am

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்ககூடாது, தமிழர்களை இழிவு படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாணவர் பாசறை சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி பல்கலைக்கழக மாணவர் பாசறை செயலாளர் சி.ராம்ஜி தலைமையில் மாவட்ட மாணவரணி தலைவர் ப.மாரியப்பன், அருள் என்கிற மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பொறியியல் புல மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியபிரதமர் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு எதிராகவும் கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.