அந்த கடிதத்தில், சிதம்பரம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்விக் கண் திறந்திட்ட சுவாமி சகஜானந்தா நினைவை போற்றும் வகையில், அவருக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும் என்ற எனது கோரிக்கையினை ஏற்று சுவாமி சகஜானந்தாவிற்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்திலேயே மணி மண்டபம் கட்டப்படும் என்ற தங்களது அறிவிப்பு அனைத்து பகுதி மக்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. மணி மண்டபம் கட்டுவதற்கு சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்ட நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் சிதம்பரம்-சீர்காழி சாலையில் மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டது.