வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பீகார் மாணவர் சாவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் சோனுகுமார் (22). பீகாரைச் சேர்ந்த இம்மாணவர் அண்ணாமலைநகரில் சக மாணவர்களுடன் அறை எடுத்து

News image
Updated On :10 செப்டம்பர் 2013, 3:23 pm

G.Sundararaj

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் பீகாரைச் சேர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இறந்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் சோனுகுமார் (22). பீகாரைச் சேர்ந்த இம்மாணவர் அண்ணாமலைநகரில் சக மாணவர்களுடன் அறை எடுத்து தங்கி படித்து வந்தார். இவர் இன்று மாலை அண்ணாமலைநகரிலிருந்து சிதம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த போது ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர கட்டையில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் சோனுகுமார் இறந்தார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.