தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மீனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒருவர் படுகாயம்

சிதம்பரம் அருகே ஆற்றில் துள்ளிக் குதித்து கொண்டிருந்த மீனை நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த போது எதிர்புறத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொருவர் மீது துப்பாக்கி ரவைகள் பட்டு படுகாயம் அடைந்தார்.

Updated On :12 செப்டம்பர் 2013, 10:09 am

சிதம்பரம் அருகே ஆற்றில் துள்ளிக் குதித்து கொண்டிருந்த மீனை நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த போது எதிர்புறத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொருவர் மீது துப்பாக்கி ரவைகள் பட்டு படுகாயம் அடைந்தார்.

குமாரக்குடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த தருமன் (25). இவர் வியாழக்கிழமை காலை சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் பாழ்வாய்க்காலில் ஆற்றில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த மீனை பிடிக்க துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது எதிர்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சடையன் (60) என்பவர் மீது துப்பாக்கி ரவைகள் சுமார் 10-க்கும் மேற்பட்டது பாய்ந்து படுகாயமுற்றார். படுகாயம் அடைந்த சடையன் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.