சிதம்பரம் நேதாஜிதெருவில் வசிப்பவர் பார்த்தீபன். இவர் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகாமையிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜகாங்கீர்மமுகமது தலைமையில் தீயணைப்பு மீட்புத்துறையினர் 2 வாகனங்களில் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், பள்ளி சான்றிதழ்கள், புத்தகங்கள் அனைத்தும் எரிந்து சேதமுற்றன. தீவிபத்து குறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.