தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஊதியம் வழங்க கோரி கல்லூரி கவுரவ விரிவையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.

Updated On :19 செப்டம்பர் 2013, 10:54 am

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.

சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியமின்றி பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக கடந்த 5 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும், பணி நீட்டிப்பு ஆணை உடன் வழங்க வேண்டும், யுஜிசியின் அடிப்படை ஊதியம் ரூ.15.600-ஐ வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வாயில் முன்பு வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் க.வெற்றிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 20 கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.