கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 16 வயதில் பிளஸ் 1 படிக்கும் மகள் உள்ளார். இந்த நிலையில், வேட்டியம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த தியாகராஜனின் மகன் லோகேஷ்(25) என்பவர் கடந்த 26-ஆம் தேதி அதிகாலை தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக தேவகி கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி எஸ்.ஆர்.செந்தில்குமார் உத்தரவின்படி, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவியை கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் மீட்டனர். அப்போது அவருடன் இருந்த லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக்(எ)விஜய், இளவரசன், அனந்தராமன் ஆகியோரை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.