குறிப்பாக திருநாரையூர், பிள்ளையார்தங்கல், எடையார், கூடுவெளிச்சாடி, கொடியாளம், வடமூர், முகையூர், பரிவிளாகம், பெருங்காலூர், சிவக்கம், ஆட்கொண்டநத்தம், துரைப்பாடி, துணிஞ்சிரமேடு, பொன்னாங்கன்னிமேடு, வக்காரமாரி, இளநாங்கூர், காட்டுக்கூடலூர், செட்டிமேடு, பன்னப்பட்டு, நாஞ்சலூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசன கிளை வாய்க்காலில் நீர் வராததால், அருகாமையில் நீண்ட தூரத்தில் உள்ள பொன்னேரி, மணவாய்க்கால், பாதிமுத்தான் ஓடை ஆகியவற்றிலிருந்து மின்மோட்டோர் மூலம் நீண்ட தூரம் பைப்போட்டு நீரை தங்களது வயலுக்கு கூடுதல் செலவு செய்து கொண்டு வருகின்றனர். சில இடங்களில் சாலைகளை கடந்த பைப் மூலம் தங்களது வயலுக்கு நீரை மோட்டார் மூலம் கொண்டு செல்கின்றனர். எனவே கீழணையிலிருந்து வடக்குராஜன் வாய்க்கால் மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரியிலிருந்து கிளை வாய்க்கால்களில் முழுக்கொள்ளவு நீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.