போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை கொள்ளை
ஈரோடு அருகே கொல்லம்பாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (65). இவரது கணவர் துரைசாமி இறந்துவிட்டதால், சின்னம்மாள் மகள் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு மளிகைக்


ஈரோடு அருகே கொல்லம்பாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (65). இவரது கணவர் துரைசாமி இறந்துவிட்டதால், சின்னம்மாள் மகள் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு மளிகைக் கடைக்குச் சென்றாராம். அப்போது, 3 பேர் தங்களை போலீஸார் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அவர்கள், சின்னம்மாளிடம் நகையை ஏன் இப்படி போட்டுச் செல்கிறீர்கள். கழற்றி பத்திரமாக கையில் வைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறி ஒரு துண்டில் சுற்றிக் கொடுத்தார்களாம். சின்னம்மாள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அதில் செங்க்ல்தான் இருந்ததாம். இது குறித்து அவர் உடனே போலீஸில் புகார் அளித்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...