தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எருமை மாட்டில் ஏறிவந்து வேட்பு மனு தாக்கல் செய்தவரால் நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன் இன்று காலை விநோதமாக எருமை மாட்டில் ஏறி வந்தார்.

News image
Updated On :3 ஏப்ரல் 2014, 5:10 am

முருகன்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன் இன்று காலை விநோதமாக எருமை மாட்டில் ஏறி வந்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொண்டர்கள் 8 பேர் உடன் வர, எருமை மாட்டில் அமர்ந்து வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியபோது, பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பொருளாதாரம் பல மடங்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எனக்கு காரிலோ வண்டியிலோ வந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் அளவு பொருளாதார வசதியில்லை. என் நண்பருடைய எருமை மாட்டை யாசகம் கேட்டுப் பெற்று வந்தேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.