நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருநங்கைகள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு: புதுவை அரசு செயல்படுத்த வலியுறுத்தல்

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கையை புதுவை மாநில அரசு எடுக்க வேண்டும் என திருநங்கை கல்கி சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

News image
Updated On :16 ஏப்ரல் 2014, 9:46 am

சுஜித்குமார்

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கையை புதுவை மாநில அரசு எடுக்க வேண்டும் என திருநங்கை கல்கி சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

புதுவையில் அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது: நமது நாட்டில் புராண காலத்திலும், இதிகாசங்களிலும் திருநங்கைகளுக்கு முக்கியமான இடம் கிடைத்திருந்தது. முகலாயர்கள் ஆட்சியில் கூட திருநங்கைகளுக்கு உரிய மரியாதை இருந்தது.

ஆனால் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் இருந்து எங்கள் இனத்தவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெற்றோர்களே எங்களை நிராகரித்து வீட்டை விட்டு அனுப்பி விட்டனர்.

மேலும் உரிய கல்வி இல்லாததாதலும், வறுமையாலும், திருநங்கைகள், பாலியல் தொழிலுக்கும், பிச்சை எடுக்கவும் சென்று விட்டனர்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

தில்லியைச் சேர்ந்த நாசா என்ற தொண்டு நிறுவனம் தொடுத்த பொதுநல வழக்கில் நீதிபதிகள் இத்தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

இத்தீர்ப்பால் திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலும் பாலியல் தொழில், பிச்சை எடுப்பவர்கள் நிலை மாறும். உரிய கல்வி, வேலைவாய்ப்பு பெறமுடியும். சொத்துரிமையும் கிடைக்கும். பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிராகரிக்கும் சூழல் மாறி விடும். தமிழகத்தில் திருநங்கைகளுக்கு ரேஷன் அட்டை, மனைப்பட்டா உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய, மாநில அரசுகள் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கு தேவையான சட்ட அங்கீகாரத்தை வழங்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேர உள்ளேன் என்றார் கல்கி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.