ஒரு சில இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்போடு பணம் வழங்கப்படுகிறது. எனவே தேர்தல் ஆணையம் அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். காவல்துறையினரையும் கண்காணிக்க வேண்டும். பெரும்பான்மையான வாக்கு சாவடிகளை கைப்பற்ற சிலர் ஈடுபட உள்ளதாக தகவல் வந்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளிலும், தலித், இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் அதிகளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு, குடிநீர் பிரச்சனை பிரதான குறைகளாக உள்ளன. சிதம்பரம் தொகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு சாதகமான நிலை உள்ளது. திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருமாவளவனுடன் சிதம்பரம் நகர திமுக செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், மாவட்ட கலை, இலக்கிய பிரிவு செயலாளர் ஜேம்ஸ்விஜயராகவன், நகர அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், நகரமன்ற உறுப்பினர்கள் ரா.வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ராஜராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் வன்னிஅரசு, மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், பால.அறவாழி உள்ளிட்டோர் சென்று நகரில் 33 வார்டுகளிலும் வாக்கு சேகரித்தனர்.