நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி!

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் மை, ஆவணங்கள் மற்றும் எழுது பொருட்கள்

News image
Updated On :23 ஏப்ரல் 2014, 12:58 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் மை, ஆவணங்கள் மற்றும் எழுது பொருட்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை தொடங்கி நடைபெறவுள்ளதால், சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் சீலிட்டு வைக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் புதன்கிழமை காலை அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. சிதம்பரம் உதவிஆட்சியரும், சிதம்பரம் உதவித் தேர்தல் அதிகாரியுமான எம்.அரவிந்த், தேர்தல் பார்வையாளர் (செலவினங்கள்) அபிஷேக் ஆனந்தராவ், புவனகிரி உதவித் தேர்தல் அதிகாரி தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் சீல் திறக்கப்பட்டு சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 239 வாக்குச்சாவடிகளுக்கும், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 274 வாக்குச்சாவடிகளுக்கும் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகத்திலிருந்து வேன் மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் எழுதுபொருள்கள், மை, ஆவணங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. அதேபேன்று காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 236 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் எழுதுபொருள்கள், மை மற்றும் ஆவணங்கள் அனுப்பப்பட்டன.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஆணை: சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள் 975 பேருக்கும், ரிசர்வ் அலுவலர்கள் 196 பேருக்கு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டது. இதேபோல் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்று அலுவலர்கள் 1033 பேருக்கும், ரிசர்வ் அலுவலர்கள் 220 பேருக்கும் தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டது. நியமன ஆணை வழங்கும் பணியை உதவி தேர்தல் அதிகாரி எம்.அரவிந்த், தேர்தல் பார்வையாளர் அபிஷேக் ஆனந்தராவ் ஆகியோர் தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினர்.

காட்டுமன்னார்கோயில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1140 பேருக்கும், ரிசர்வ் அலுவலர்கள் 245 பேருக்கும் தேர்தல் பணி ஆணையை மாவட்ட கலால் அலுவலரும், காட்டுமன்னார்கோயில் உதவித் தேர்தல் அதிகாரியுமான குழந்தைவேலு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.