மதவாதத்திற்கும், ஜனநாயகத்திற்கு நடைபெறும் போர்தான் இந்த தேர்தல். இந்த பேரில் கருணாநிதி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும். பாஜக முரண்பாடான கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக, முஸ்லீம், பிற்பட்டுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் யாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்காமல் தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணிதான் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளது. தொகுதி முழுவதும் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் வழங்கி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் மக்கள் குரல் ஒலிக்க, மக்கள் எனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.