நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகம் உட்கோட்டப்பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன் உத்திரவின்படி, சித்தாமூர் போலீஸார் செவ்வாய்கிழமை இரவு வாகன தணிக்கை செய்யும்போது, மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன் உத்திரவின்படி, பாராளுமன்றத்தேர்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமை அன்று, பல்வேறு இடங்களில் போலீஸார் வாகன சோதனை, மர்மமான இடங்களை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை செய்தனர். சித்தாமூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீஸார் செவ்வாய்கிழமை இரவு மதுராந்தகம் அடுத்த ஜமீன்எண்டத்தூர் அருகே வாகன தணிக்கை செய்யும்போது, மோட்டார் சைக்கிளில் சந்தேகம்படும்படியாக ஜமீன்எண்டத்தூர் சின்னதுரை மகன் செந்தில் (23), அணணாநகர் வேதாசலம் மகன் ஏழுமலை (34) ஆகிய 2 நபர்கள் வேகமாக வந்தனர்.
அப்போது போலீஸார் அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளை சோதனை செய்தபோது 180 மில்லி கொண்ட 384 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர். அவர்களை விசாரித்ததில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 324 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர். மொததமாக 768 மதுபாட்டில்களையும், மதுபாட்டில்களை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்யும் கைப்பற்றினார்கள்.
இது குறித்து சித்தாமூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

