எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் கோடை கால திருட்டைத் தடுக்கலாம்: போலீஸார் அறிவுறுத்தல்

கோடை விடுமுறையைக் கொண்டாட வெளியூர் செல்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் திருட்டை தவிர்க்கலாம் என்றார் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் து.இளங்கோவன்.

News image
Updated On :26 ஏப்ரல் 2014, 6:19 am

அருசிவபாலன்

கோடை விடுமுறையைக் கொண்டாட வெளியூர் செல்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் திருட்டை தவிர்க்கலாம் என்றார் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் து.இளங்கோவன்.

பள்ளித்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையை கழிக்க குடும்பத்துடன்  வெளியூர் செல்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொன்னமராவதி காவல் துணைக்கண்காணிப்பாளர் து.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, வெளியூர் செல்பவர்கள் தங்களது வீடுகளை தரமுள்ள பூட்டுக்களினால் பூட்டிச்செல்லவேண்டும். வீடு திரும்பும் வரை தற்காலிகமாக வாட்ச்மேன் நியமிப்பது நல்லது. அருகிலுள்ள காவல்நிலையங்களில் தகவல் அளித்து செல்லவேண்டும். வீட்டில் உள்ள நகைகள், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்து விட்டு செல்லவேண்டும். வீட்டில் விளக்கு எரிய செய்யவேண்டும். அவ்வப்போது பக்கத்து வீட்டினருடன் தொடர்பு கொண்டு வீட்டின் நிலவரம் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அதுபோல தெருக்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாடினால் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மேலும் கோடை கால திருட்டை தவிர்க்கும் வகையில் இரவு காலங்களில் ரோந்துப்பணி அதிகரிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.