பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்
தருமபுரியிலிருந்து பாப்பாரப்பட்டி அருகே மலைப்பகுதியில் உள்ள மருகாரம்பட்டிக்கு தடம் எண் 4 நகர்ப்பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது.பேருந்தை


தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
தருமபுரியிலிருந்து பாப்பாரப்பட்டி அருகே மலைப்பகுதியில் உள்ள மருகாரம்பட்டிக்கு தடம் எண் 4 நகர்ப்பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது.பேருந்தை தீவட்டிபட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயவேல்(52) ஓட்டிச் சென்றனர். இந்த பேருந்து, மலைப்பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் உச்சிப்பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சிறுது தொலைவு பின்னோக்கி வந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஓட்டுநர் ஜெயவேல் மற்றும் அதில் பயணம் செய்த ரத்தினம்மாள்(50), புதூரைச் சேர்ந்த தங்கராஜ் என்பரின் மனைவி கன்னியம்மாள் (36), கெட்டூர்ச் சேர்ந்த நஞ்சன் மனைவி கோவிந்தம்மாள் (45), சாமிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த முத்துகவுண்டர் மகன் முனுசாமி(85), மருதள்ளியைச் சேர்ந்த மாரி (44), பிக்கம்பட்டியைச் சேர்ந்த மல்லிகா(50) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து, தகவல் அறிந்து பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், பாப்பராப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக் குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...