தமிழ்வேலனும், சதீஷூம் ஆகிய இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து செல்போன் மற்றும் லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்து ஒரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனை தமிழ்வேலவன், தனது சக மாணவர்களிடம் தெரிவித்ததால், என்னை மாணவர்கள் கேலி செய்தனர். மேலும் இந்த விஷயத்தில் பெரியவர்களிடம் யாரிடமாவது சொல்லி விடுவான் என்ற அச்சத்தில் கடந்த ஏப்.13-ம் தேதி ஆபாச படம் பார்க்கலாம் வா என அருகாமையில் உள்ள சவுக்கை தோப்பிற்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என மாணவர் சதீஷ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, சதீஷை கைது செய்தனர்.