தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

முதியோர் உதவித் தொகை நிறுத்தப் பட்டதைக் கண்டித்து இருந்த சாகும் வரை உண்ணாவிரதம் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதால் வாபஸ்

சிதம்பரத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டதால், 2 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்து திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினரின் மேற்கொள்ள இருந்த சாகும் வரை உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2014, 1:12 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டதால், 2 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்து திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினரின் மேற்கொள்ள இருந்த சாகும் வரை உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.

சிதம்பரம் வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கான முதியோர் உதவித் தொகையினை வழங்கக் கோரி ஆகஸ்டு 1-ம் தேதி முதல் மேலவீதி அண்ணாசிலை அருகே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சிவா.கண்ணதாசன் அறிவித்திருந்தார். இதனையடுத்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சிவா.கண்ணதாசன், எம்.முகமது உசேன், இந்திய கம்யூ கட்சி செயலாளர் வி.எம்.சேகர், தனி வட்டாட்சியர் (கோயில் நிலங்கள்) பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல் கட்டமாக முதியோர் உதவித்தொகை பெறும் 2 ஆயிரம் பயனாளிகள் நீக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிப்பது, 19,002 நபர்களுக்கு வழங்கப்பட்டு உதவித்தொகையினை மறுவிசாரணை 18-7-2014 முதல் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவுற்று நடவடிக்கை மேற்கொள்வது. மேற்கண்ட முடிவுகள் குறித்து சிதம்பரம் உதவிஆட்சியரிடம் கருத்துரை கேட்டு கடிதம் அனுப்புவது,  சாகுவரை உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.