கூட்டத்தில் திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சிவா.கண்ணதாசன், எம்.முகமது உசேன், இந்திய கம்யூ கட்சி செயலாளர் வி.எம்.சேகர், தனி வட்டாட்சியர் (கோயில் நிலங்கள்) பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல் கட்டமாக முதியோர் உதவித்தொகை பெறும் 2 ஆயிரம் பயனாளிகள் நீக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிப்பது, 19,002 நபர்களுக்கு வழங்கப்பட்டு உதவித்தொகையினை மறுவிசாரணை 18-7-2014 முதல் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவுற்று நடவடிக்கை மேற்கொள்வது. மேற்கண்ட முடிவுகள் குறித்து சிதம்பரம் உதவிஆட்சியரிடம் கருத்துரை கேட்டு கடிதம் அனுப்புவது, சாகுவரை உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.