தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் சிகரெட் விலை திடீர் உயர்வு

சிதம்பரம் நகரில் உள்ள கடைகளில் சிகரெட் விலை திடீரென உயர்ந்துள்ளது. நகரில் பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலைக்கு சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக ரூ.6-க்கு விற்பனை

News image
Updated On :2 ஆகஸ்ட் 2014, 1:56 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் சிகரெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிதம்பரம் நகரில் உள்ள கடைகளில் சிகரெட் விலை திடீரென உயர்ந்துள்ளது. நகரில் பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலைக்கு சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக ரூ.6-க்கு விற்பனை செய்ய வேண்டிய கோல்டு பில்டர் சிகரெட் ரூ.7, ரூ.8 என விற்கப்படுகிறது. ரூ.9-க்கு விற்பனை செய்ய வேண்டிய கோல்டு பில்டர் கிங்ஸ் சிகரெட் ரூ.10, ரூ.11-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அறிந்த சிகரெட் தயாரிக்கும் ஐடிசி நிர்வாகம், அனைத்து கடைகளிலும் விலை மாற்றம் இல்லை என ஸ்டிக்கர் ஒட்டியது. ஆனால் பல்வேறு கடைகளில் ஸ்டிக்கரை அகற்றிவிட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே சிகரெட் விலை மாற்றத்தை கட்டுப்படுத்த, ஐடிசி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகை பிடிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.