6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குன்னம் அருகே பள்ளி மாணவி பலாத்காரம்: கட்டட தொழிலாளி கைது

குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமம், கிழக்குத் தெருவை சேர்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை மாலை அங்குள்ள பால்

News image
Updated On :3 ஆகஸ்ட் 2014, 11:14 am

தர்மராஜ்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சனிக்கிழமை மாலை பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த கட்டடத் தொழிலாளியை, குன்னம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமம், கிழக்குத் தெருவை சேர்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை மாலை அங்குள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் கட்டடத் தொழிலாளியான தேவேந்திரன் (26), அந்த மாணவியை தூக்கிச்சென்று அப்பகுதியில் உள்ள கரும்பு காட்டில் பலாத்காரம் செய்துவிட்டாராம்.

இதுகுறித்து, அந்த மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராஜ் வழக்குப் பதிந்து, தேவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.