தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடி செலவில் கதவணை: காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வரவேற்பு

கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கதவணை அமைத்து, நீரை பாசனத்திற்கும், குடிநீருக்கும் திருப்பிவிடும் திட்டத்தை தமிழக

News image
Updated On :4 ஆகஸ்ட் 2014, 3:19 pm

ஜி.சுந்தரராஜன்

கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கதவணை அமைத்து, நீரை பாசனத்திற்கும், குடிநீருக்கும் திருப்பிவிடும் திட்டத்தை தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத்தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் அறிவித்துள்ள திட்டம் கடலூர், நாகை மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்றம் தரக்கூடிய மிகப்பெரிய திட்டம். இதை இரண்டு மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகளும் வரவேற்கிறோம். இந்த திட்டம் 1990-ம் ஆண்டு தீட்டப்பட்டது. ஏதோ பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்டுவிட்டது. இந்த திட்டம் தற்போது தொடங்கப்படுவதால், சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக 20 தினங்களுக்கு பாசன வசதி பெறும். மேலும் கடலில் வீணாகும் உபரிநீர் ஒரளவிற்கு சேமிக்கப்படும். கொள்ளிடத்தின் இருகரைகளிலும் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி கணிசமாக உயரும், இதன் காரணமாக பம்பு செட் மூலம் கூடுதலாக ஒரு போகம் சாகுபடி செய்ய முடியும். இத்திட்டத்தை மிகவிரைவில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர். தமிழக முதல்வர் அறிவித்த இந்த திட்டத்தால் சுமார் 2 டிஎம்சி நீர் தேக்கமுடியும் என்கிறார் கே.வி.கண்ணன்பிள்ளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.