ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை முடிந்த பின்னர் பார்களில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன், சார்பு ஆய்வாளர் தாமரைவிஷ்ணு ஆகியோர் திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையை ஒட்டியுள்ள பாரில் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 10 அட்டை பெட்டிகளில் 471 மது பாட்டில்கள் இருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீஸார் அங்கிருந்த விநாயகமூர்த்தி, மகேந்திரன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.