தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வண்டலூர் அருகே மணல் லாரி மோதி மாணவர்கள் 2பேர் சாவு

கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் 2 பேர் மணல் லாரியின் சக்கரத்தில் சிக்கி இறந்தனர்.

Updated On :9 ஆகஸ்ட் 2014, 1:50 pm

கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் 2 பேர் மணல் லாரியின் சக்கரத்தில் சிக்கி இறந்தனர்.

 கூடுவாஞ்சேரியை அடுத்த வேங்கடமங்கலம் அம்பேத்கார் நகரைச்சேர்ந்த வைரமுத்து என்பவரின் மகன் சதீஷ்(18) ப்ளஸ் 1 மாணவர், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் டில்லிபாபு (18) ஐடிஐ மாணவர் இருவரும் சனிக்கிழமை பொருள்கள் வாங்குவதற்காக பக்கத்தில் உள்ள கண்டிகைக்கு சென்று விட்டு வேங்கடமங்கலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

 அப்போது வழியில் சென்ற மணல் லாரியை முந்திய போது லாரியின் மீது மோதியதில் லாரி டயரில் சிக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

 தகவலறிந்த தாழம்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்த மாணவர்கள் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இதுகுறித்து தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.