மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கட்டடத் தொழிலாளி பலி

விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்து புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. பொட்டல்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன்

News image
Updated On :10 ஆகஸ்ட் 2014, 1:02 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகரில் பழைய வீட்டை இடித்தபோது மேல் தளத்திலிருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்து புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. பொட்டல்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சுந்தரம் (55), அன்னை சிவகாமி புரத்தைச் சேர்ந்த நடராஜன் (63) ஆகியோர் வீட்டின் மேல் தளத்தில் ஏணியில் நின்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர் பாராத விதமாக மேற்தளத்திலிருந்த காரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் கீழே விழுந்த சுந்தரம், நடராஜனும் கால் தடுமாறி கீழே விழுந்தனர். இதில், தலையில் பலத்த காயமடைந்து சுந்தரம் உயிரிழந்தார். லேசான காயங்களுடன் நடராஜன் தப்பினார்.

இதுகுறித்து, விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.