நெல்லையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் சிதம்பராபுரம் கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் சிதம்பராபுரம் கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிதம்பராபுரம் ஊர்ப் பெயரை அரசு பதிவேடுகளிலும், அரசு அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்குப் பின்பும் அதனை நடைமுறைப்படுத்த மறுக்கும் திருநெல்வேலி ஆட்சியரைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விஸ்வஹிந்து பரிஷத் மாவட்டப் பொறுப்பாளர் டி.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.பாலாஜி கிருஷ்ணசுவாமி வரவேற்றார். ஏ.பி.வி.பி. தேசியச் செயலர் ஆர்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், விஸ்வஹிந்து பரிஷத் மாநில பொருளாளர் பெரியகுழைக்காதர், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் மு.பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
போராட்டத்தில் பங்கேற்ற சிதம்பராபுரம் கிராம மக்கள் கூறுகையில், அரசின் அ பதிவேடு உள்ளிட்டவற்றில் சிதம்பராபுரம் என்றே உள்ளது. அப்படியிருக்கையில் அந்தப் பெயரை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் தயங்குவது வியப்பாக உள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சிதம்பராபுரம் என்ற பெயரே தொடர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.தங்கமனோகர், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கட்டளை எஸ்.ஜோதி, சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...